Thursday, February 25, 2010

....இலக்கணம் இது தானோ.....!?

கனவுகளாய் வந்தாய்
கவிதைகளாய் மாறினாய்!

கானலாய் இருந்தேன்
கானகம் ஆக்கினாய்!!

நனவுகளாய் வந்தாய்
நாணலில் நின்றாய்!!

மெழுகாய் இருந்தேன்
தீயாய் தீண்டினாய்!!

காற்றாய் வந்தாய்
காதலாய் மாறினாய்!!

காலங்கள் கடந்தன
காதலும் கசந்தன!!

மணம் முடிக்க வேண்டும் என்றேன்
மனம் உடைத்து சென்றாய்!!

காரணம் கேட்டேன்
கணம் சில மட்டும் காதல் என்றாய்!!

இன்றைய காதல் இலக்கணம்
இது தானோ.....!?

6 comments:

  1. நல்லா இருக்கு...,

    ReplyDelete
  2. turn off..., word verification in your blogger settings

    ReplyDelete
  3. //காற்றை வந்தாய்
    காதலாய் மாறினாய்//

    காற்றாய் வந்தாய் என்றிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  4. நிலாரசிகனுக்கு,
    ---------------------
    எழுத்துப்பிழை நண்பா!!! திருத்திவிட்டேன்!!!!
    நன்றி,
    -மதுமிதா

    ReplyDelete
  5. அருமை....

    தொடருங்கள்..

    ReplyDelete
  6. நன்றி அகல்விளக்கு நண்பரே..
    நன்றி பேனாமூடி நண்பரே..

    ReplyDelete