Thursday, February 25, 2010

....இலக்கணம் இது தானோ.....!?

கனவுகளாய் வந்தாய்
கவிதைகளாய் மாறினாய்!

கானலாய் இருந்தேன்
கானகம் ஆக்கினாய்!!

நனவுகளாய் வந்தாய்
நாணலில் நின்றாய்!!

மெழுகாய் இருந்தேன்
தீயாய் தீண்டினாய்!!

காற்றாய் வந்தாய்
காதலாய் மாறினாய்!!

காலங்கள் கடந்தன
காதலும் கசந்தன!!

மணம் முடிக்க வேண்டும் என்றேன்
மனம் உடைத்து சென்றாய்!!

காரணம் கேட்டேன்
கணம் சில மட்டும் காதல் என்றாய்!!

இன்றைய காதல் இலக்கணம்
இது தானோ.....!?

Tuesday, February 23, 2010

விழுந்த விநாடி முதல்.......

கனவுகள் மட்டும்
நினைவுகள் தோறும்
நிழல்களாய் உழல்கின்றன

அவள் நிஜம் என் விழிகளில்
விழுந்த விநாடி முதல்.......

Monday, February 22, 2010

முதல் பதிவு

நினைவுகள் தொடர் உதயமான தினம் முதல்
நிதம் வரை முதல் முயற்சிக்கு முன்னால்
புருவங்களுக்கு மத்தியில்
புன்முறுவல் புரியும் உன் முகத்தை
கண்மூடி காட்சிகளாய் தரிசிக்கிறேன்!!!!
என் நினைவின் முதல் பதிவான
அ(கர) இலக்கணமான அம்மா உனக்கு
இது சமர்ப்பணம்!!!!!!!


-பதிவுகள் தொடரும்!!!!!!!!!!